கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூர் பகுதியில் சுகவர்ஷா(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுபவர்ஷா வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சொக்கம்புதூர் சாலையில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் சுகவர்ஷா ஓட்டி சென்ற வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப வர்ஷாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுகவர்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.