கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷா(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் குடிநீர் குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என்பது தொடர்பாக அனுஷாவுக்கும் அவரது மாமியார் ராஜகுமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து ராஜகுமாரி வேலைக்கு சென்றுவிட்டார். அந்த சமயம் வயலுக்கு குளிக்க சென்ற கோவிந்தராஜ் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததை கண்டார்.

இதனால் சந்தேகமடைந்த கோவிந்தராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனுஷா தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அனுஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.