கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார்.இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பெயிண்டரான பிரதீபன்(25) என்பவர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதனால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரதீபனை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஏற்கனவே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பிரதீபன் சிறுமியை கடத்தி சென்றதால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.