தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி கிராமத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கிஷோர்(20) நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிஷோரின் உடலை மீட்டனர். பின்னர் கிஷோரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.