திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவுத்தன்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுந்தரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சுந்தரேசன் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுந்தரேசனின் தாய் ராஜாமணி, அவரது அண்ணன் முருகன் ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இருவரிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ராஜாமணி, முருகன் ஆகியோரிடம் சுந்தரேசன் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று தகராறு ஏற்பட்டு போது முருகன் தனது தம்பியின் தலையில் கல்லால் அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் முருகனை போலீசார் கைது செய்தனர்.