கடலூர் மாவட்டத்தில் உள்ள பாசார் கைகாட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாராவது கொலை செய்து உடலை சாலையோரம் வீசி சென்றார்களா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.