தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாவூர் காலனி பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்ணும் அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் அஜித் குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து இளம்பெண் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என இளம்பெண் அஜித்குமாரை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அஜித்குமார் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.