திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்து வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். பின்னர் 1 1/2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சமய தரிசனம் செய்தனர்.