கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வண்டாவிளை பகுதியில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ மகள்(45) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் செல்வமகளின் தாய் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வமகளுக்கு அவரது தந்தையும், குடும்பத்தினரும் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வமகள் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வ மகளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.