வீர சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் ஆண்டு நினைவஞ்சலி நாளின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் சில இளைஞர்கள் பொதுச் சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் மற்றும் கார்களில் சாகசங்கள் செய்வது, இரைச்சல் எழுப்புவது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகள் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதோடு, பல நேரங்களில் விபத்துகளுக்கும் வழிவகுப்பதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மாபெரும் தலைவர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் அமைதியான முறையில் மரியாதை செலுத்த வேண்டுமே தவிர, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டம்-ஒழுக்கத்தைக் சீர்குலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
ஏழை எளியவர்களுக்கு உதவுவது, முதியோர் மற்றும் காப்பகங்களுக்கு உணவு வழங்குவது, இரத்த முகாம்களை நடத்துவது அல்லது ஆக்கபூர்வமான சமூக நலப்பணிகளில் ஈடுபடுவதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
போலீசார் அவ்வப்போது பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு கட்டுப்படுத்த முயன்றாலும், இதுபோன்ற செயல்கள் ஆண்டுதோறும் தொடர் கதையாக மாறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Respecting a leader should never become a nuisance to the public.
I have one humble request to our People’s CM Vijay.
Every year, during the remembrance day of Dheeran Chinnamalai, we see the same pattern. In the name of paying tribute, many youngsters engage in rash bike and… pic.twitter.com/QrsXPJBk7D
— TVK Pulse (@TVKpulse) August 3, 2026
“>
தலைவர்களின் உன்னத கொள்கைகளைக் கடைப்பிடித்து அமைதியைக் காப்பதே அவர்களுக்குச் செலுத்தப்படும் உண்மையான மரியாதை என்பதை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
