கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி(27) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அப்பகுதியில் இருக்கும் பொது குடிநீர் குழாயில் கலைவாணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது கலாவதி என்ற பெண் தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த கலாவதியின் மகன்கள் ஜெகதீஷ், பாலாஜி ஆகிய 2 பேரும் தகாத வார்த்தைகளால் கலைவாணியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கலைவாணி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜெகதீஷ், பாலாஜி ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.