அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி காலணியில் மகாலிங்கம்(65) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மகாலிங்கம் கன்னியம்மன், மாரியம்மன் கோவில்கள் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூமிநாதன் என்பவர் கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல் ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய்? எனக் கேட்டு தகராறு செய்துள்ளார்.

மேலும் பூமிநாதன் மகாலிங்கத்தை கருங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். இதனால் படுகாயமடைந்த மகாலிங்கம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூமிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.