திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி கபாலி பாறை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணவேணி அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகே நின்ற இரண்டு பெண்கள் கிருஷ்ணவேணியிடம் குழந்தையை கொடுத்து வைத்திருக்கும் படி கூறியுள்ளனர்.

இதனையடுத்து முருகன் குறிச்சியில் வைத்து இறங்க வேண்டும் எனக் கூறி அந்த பெண்கள் குழந்தையை பெறுவது போல கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து தங்க சங்கிலி திருடு போனதை அறிந்த கிருஷ்ணவேணி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.