திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் சோலைபுரம் பகுதியில் விவசாயியான சின்னராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை சின்னராஜா வீட்டிலிருந்து அருகில் இருக்கும் ஆற்றுக்கு குளிப்பதற்காக நடந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து செல்போனில் வந்த அழைப்பை சின்ன ராஜா எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி சின்ன ராஜா சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்ன ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.