திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்பாடு கிராமத்தில் மாதவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவி ரம்மதாபுரத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சீலாத்திகுளம்-முடவன் குளம் சாலையில் மாதவி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கல்குவாரியில் கற்களை ஏற்றி கொண்டு முன்னால் சென்ற லாரியை மாதவி முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டும், லாரியும் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்த மாதவி லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.