விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியரசு-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஜெயவர்த்தனி பள்ளி, மாவட்டம், மாநில அளவிலான 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஜெயவர்த்தினி பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதே போல் தேசிய யோகா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் ஜெயவர்த்தினி கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றார்.

வருகிற டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள ஜெயவர்த்தனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கம்போடியா நாட்டில் மே மாதம் 27-ஆம் தேதி நடைபெற உள்ள சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொள்ள தேர்வான மாணவிக்கு ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.