விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி-நாரணாபுரம் சாலையில் இருக்கும் முருகன் காலனியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.

இதனையடுத்து கண்விழித்து வெளியே வந்த கணேஷ் குமார் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதுகுறித்து கணேஷ்குமார் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முன் விரோதம் காரணமாக யாராவது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.