விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 மாதங்களாக வனிதா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.