விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூலிப்பட்டியில் பாண்டி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(33) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பாண்டியும், கணேசனும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டி, கணேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் பாண்டி, கணேசன் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பாண்டிக்கு 2000 ரூபாய் அபராதமும், கணேசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.