சென்னை, கோவை மற்றும் மதுரையை தொடர்ந்து திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயிலுக்காக திருச்சியில் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருக்கிறது என்றும் வயலூர், துவாக்குடி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் 68 கிலோ மீட்டர் தொலைவுக்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும், எந்த வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறித்து, அடுத்து நடைபெறக்கூடிய விரிவான திட்ட அறிக்கையின்போது தெரியவரும். இது தொடர்பாக அரசு ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.