கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் இருக்கும் தனியார் கல்லூரி முன்பு இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர் விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன்(29), கல்லூரி மாணவரான ராம்குமார்(20) என்பது தெரியவந்தது.

கஞ்சா பழக்கம் மூலம் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் பழனியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.