திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பாப்பாக்குடியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் புதுகுளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நந்தன்தட்டையில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் இங்கு குளிக்க கூடாது என தங்க ராஜாவை அவதூறாக பேசி கீழே தள்ளிவிட்டு அரிவாளால் தாக்க முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து தங்கராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலகிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது காவல்துறை என்னை முடிந்தால் பிடிக்கட்டும் என பாலகிருஷ்ணன் போலீசாருக்கு சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு பாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.