கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமன்தொட்டி காவேரி நகர் பகுதியில் ஜலபதி(49) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜலபதி ஓசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தை ராமன்தொட்டி நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் காளிங்கபுரம் அருகே சென்ற போது சில இளைஞர்கள் ஜலபதி மீது கலர் பொடியை தூவியுள்ளனர்.

மேலும் பேருந்திலும் கலர் பொடியை பூசியுள்ளனர். இதனை ஜலபதி தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் சண்முகம்(19), ஆனந்த்(24), மஞ்சு(19), அருண்(20) ஆகிய 4 பேரும் இணைந்து ஜலபதியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜலபதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சண்முகத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.