திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை பார்த்து கொண்டிருந்த போது சரஸ்வதி திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சரஸ்வதியின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள், தமிழர் விடுதலை களம் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநில சட்ட ஆலோசகர் பிரபு ஜீவன் உள்ளிட்ட பலர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் சரஸ்வதியின் இறப்பிற்கு காரணமான ஹோட்டல் உரிமையாளர் மீதும், நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சரஸ்வதியின் உடலை வாங்க மறுத்து ரெங்கநாதபுரத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடைபெற்றது.