ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரோஷன் ரங்கம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு சென்னிமலை ரோடு பழைய ரயில்வே பணிமனை அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பள்ளிக்கூட பேருந்துக்கு ரோஷன் வழிவிட்டுள்ளர்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த ரோஷன் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.