கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்வாணன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழ்குப்பம் துணை மின் நிலையம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் தமிழ்வாணனை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி செல்போன் மற்றும் 800 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த தமிழ்வாணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.