கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கலியபெருமாளும், அவரது மகன் கவியரசனும் கொளஞ்சி என்பவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு மயானத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் திரு விநாயகமூர்த்தி, அஜித், திருமூர்த்தி ஆகியோர் கலியபெருமாளின் சகோதரரான நடராஜனை தாக்கியுள்ளனர்.

இதனை தடுக்க சென்ற கலியபெருமாளையும் அவர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கலியபெருமாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் திருமூர்த்தி உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.