தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பெண் குழந்தைக்கு கார்த்திகேயனின் குடும்பத்தினர் கேட்ட 5 பவுன் தங்க நகையை ரேணுகாவின் பெற்றோர் கொடுத்தனர்.

இதனையடுத்து கார்த்திகேயனின் குடும்பத்தினர் வரதட்சணை தொடர்பாக ரேணுகாவை தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ரேணுகா அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கார்த்திகேயன், அவரது தந்தை நீலமேகம், தாய் சகுந்தலா உள்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.