தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர்நாயக்கம்பட்டி கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மோனிகா 5- ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோனிகா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமையின் உடையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காயமடைந்த சிறுமியை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமி வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிகா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.