திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி ஜே.ஜே நகரில் சுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே பாலாஜி, துரைப்பாண்டி ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுந்தரராஜன் அவர்களை தட்டி கேட்டுள்ளார்.

அப்போது கோபமடைந்த பாலாஜியும், துரை பாண்டியும் இணைந்து சுந்தரராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலாஜி மற்றும் துரைப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.