விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமியார் இறந்ததால் மாமியாரின் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுந்தரியின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இதனால் சுந்தரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளயடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.