திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் தாகூர் தெருவில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர் முத்துவுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் சிவராஜின் மோட்டார் சைக்கிள் மீது உரசுவது போல சென்றனர். அவர்களை சிவராஜும், முத்துவும் கண்டித்தனர்.

இதனால் கோபமடைந்த மூன்று பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி சிவராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் காயமடைந்த சிவராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்தோஷ், அர்ஜுன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.