சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற பேத்தி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான மஞ்சு கணவரை விட்டு பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே நடந்து சென்ற போது 3 பேர் மஞ்சுவை கேலி, கிண்டல் செய்து தொந்தரவு அளித்தனர்.

இதனை ரங்கம்மாள் தட்டி கேட்டார். அப்போது அந்த வாலிபர்கள் மூதாட்டியை கல்லால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த ரங்கம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வரதராஜ், கோகுல், ஸ்ரீதரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.