செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் பெரிய ஏரியில் 25 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று முன்தினம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்த சூர்ய பிரகாஷின் மனைவி சுருதி என்பது தெரியவந்தது. அவருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. குடும்ப பிரச்சனை காரணமாக மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்ற சுருதி வண்டலூர் பெரிய ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.