சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாபாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதையன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசாமி என்பவரது வீட்டின் நான்காவது மாடியில் மாதையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாத எனக்கு வாந்தி வந்தது.

இதனால் குனிந்து வாந்தி எடுத்த போது எதிர்பாராதவிதமாக மாதையன் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதையனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.