கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு அவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர் இதனை பார்த்த பொதுமக்கள் வாலிபர்களை சமாதானப்படுத்தினர்.

இதனையடுத்து காயமடைந்த இரண்டு பேரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது மருத்துவமனையிலும் அவர்கள் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.