கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழராமன்புதூரில் அப்பாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இருக்கும் கடையின் மாடியில் அப்பாதுரை சென்ட்ரிங் பலகையில் ஏறி கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பலகை ஈரமாக இருந்தது.

அதன் அருகே சென்ற மின்சார வயர் பலகையில் உரசியதால் அப்பாதுரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அப்பாதுரையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அப்பாதுரை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.