கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழல் நெய்தவிளை பகுதியில் விசுவாம்பரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு அரவிந்துக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரவிந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அரவிந்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.