கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காக்கனூர் வடக்கு தெருவில் பேச்சிநாத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், தாமோதரன் என்ற மகனும், ஈஸ்வர பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பேச்சி நாத பிள்ளை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என அடிக்கடி குடும்பத்தினருடன் புலம்பி வந்ததாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த பேச்சி நாத பிள்ளை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர் பரப்புவிளை பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சி நாத பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.