திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைபட்டி கிராமத்தில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கீர்த்திவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 9-ஆம் தேதி கீர்த்திவாசன் தனது பெற்றோரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

இதுகுறித்து திவ்யா நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்து கீர்த்திவாசன் நேற்று காலை நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்றார். அவரிடம் விசாரணை நடத்தி கீர்த்தி வாசனை திவ்யாவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.