திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள குடியானகுப்பம் பகுதியில் ரயில்வே மேம்பால பணிக்காக பில்லர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ படித்து முடித்தார். நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வினோத்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குடியானகுப்பம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வினோத்குமார் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.