தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூரில் ஸ்வரூப் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரூர்- சேலம் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை கடைக்கு ஒரு ஆணும், பெண்ணும் நகை வாங்க சென்றனர். அவர்கள் 44 கிராம் எடை கொண்ட பழைய நகையை கொடுத்துவிட்டு 32 கிராம் எடை கொண்ட புதிய தங்க நகையை வாங்கி சென்றுள்ளனர்.

இதனையடுத்து பழைய நகையை சோதனை செய்து பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்வரூப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போலீஸ் நகையை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.