தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டியில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி என்ற மகன் இருந்துள்ளார் இந்நிலையில் தடங்கம் கிராமத்தில் இருக்கும் பழுதான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வையாபுரி மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வையாபுரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று வையாபுரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.