சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வளர்மதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் திருமுல்லைவாயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வளர்மதியின் அருகே வந்து நின்றார். அப்போது ரயில் பேஷன் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக கிளம்பியது. அந்த சமயத்தை பயன்படுத்தி வாலிபர் வளர்மதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடினார்.

இதுகுறித்து வளர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.