கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரி சாலை தெருவில் கார்வண்ணன்(61) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கார்வண்ணன் சாமி ஊர்வலம் வந்த போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் 21 படி அருகே நின்று தரிசனம் செய்துள்ளார். அப்போது தீட்ஷிதரர்களான கனகசபாபதி, ஸ்ரீதர்ஷன் ஆகிய இரண்டு பேரும் கார்வண்ணனை தள்ளிப்போ என கூறி கொண்டே தள்ளியதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த கனக சபாபதியும், ஸ்ரீ வர்ஷனும் கார்வண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து கார்வண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கனக சபாபதி, ஸ்ரீதர்ஷன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.