கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சகுந்தலா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு மௌசிகா(26) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரத்தினசாமி(63) என்பவர் மது குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் சகுந்தலாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதனால் சகுந்தலாவும் அவரது மகள் மௌசிகாவும் ரத்தினசாமியை தட்டி கேட்டு கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ரத்தினசாமி, மௌசிகாவை தாக்கி அவரது சேலையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரத்தினசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.