திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.வி.எஸ் நகரில் கூலி வேலை பார்க்கும் கனக பாண்டி(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கனக பாண்டி 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கனக பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் கனக பாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.