மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் சத்தியமூர்த்தி ஆறாவது தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா(42) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வலிப்பு நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஹேமலதாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஹேமலதா வீட்டில் இருந்த குத்துவிளக்கின் மீது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.