ராமநாதபுரம் மாவட்டத்தில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திருமண வயதை எட்டாத சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மதுரை தெற்கு மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பது உறுதியானது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஸ்வரன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.