திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு செந்திலுக்கும் பானு ரேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருமணத்தின்போது பானுவின் குடும்பத்தினர் 70 பவுன் தங்க நகைகள், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

அதன் பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு செந்தில் தனது மனைவியிடம் கார் வேண்டும் எனவும், பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து தர வேண்டும் எனவும் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் பானு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் செந்தில் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்று சேர்ந்து வ…